ஜெயலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகி கோரிய வழக்கு : நாளை விசாரணை..!

ஜெயலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகி கோரிய வழக்கு : நாளை விசாரணை..!
ஜெயலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகி கோரிய வழக்கு : நாளை விசாரணை..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகளை நிர்வகிக்க தமிழ்நாடு சொத்தாட்சியர் மூலம் ஒரு நிர்வாகியை நியமனம் செய்ய வேண்டுமென சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களான புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோரும் சேர்க்கப்பட்டு, அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.



இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் அவசர சட்டத்தை தமிழக அரசு அண்மையில் பிறப்பித்தது. இதனால் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கை நாளை நீதிபதிகள் காணொலி மூலம் விசாரிக்கவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com