“அமைச்சர் கைது இல்லை” - அமலாக்கத்துறை தகவலை தொடர்ந்து வீடு திரும்பினார் பொன்முடி!

பொன்முடியின் விழுப்புரம், சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.

நேற்று இரவு 8 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அது தற்போது நிறைவு பெற்றுள்ளது. பொன்முடியின் விழுப்புரம், சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.

அமைச்சர் பொன்முடி
17 ஆண்டுகள் பேராசிரியர் பணி டூ உயர்கல்வித்துறை அமைச்சர்.. யார் இந்த பொன்முடி?

நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை, 19 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. மேலும், “அமைச்சர் பொன்முடி கைது இல்லை” என அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து நள்ளிரவு 3:30 மணியளவில் புறப்பட்டு, வீடு திரும்பினார்.

தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பாணை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மகனும் எம்.பி-யுமான கௌதம சிகாமணிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் அமைச்சர் பொன்முடி, அவர் மகன்கள் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை தொடருமென சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com