மும்பை உயர் நீதிமன்றம்
மும்பை உயர் நீதிமன்றம்முகநூல்

’ மனித பற்கள் ஆபத்தான ஆயுதம் அல்ல ’ - மும்பை உயர் நீதிமன்றத்தின் கருத்து! என்ன நடந்தது?

பற்கள் ஆபத்தான ஆயுதம் அல்ல என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on

மும்பை உயர்நீதிமன்றத்தில் , பெண் ஒருவர் மைத்துனி தன்னை கடித்ததாகவும் . இது தீங்கு விளைவிக்கும் ஆயுதத்தால் தாக்கியதற்கு சமம் என்று கூறி புகார் அளித்தநிலையில், பற்கள் ஆபத்தான ஆயுதம் அல்ல என்று நிதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த 2020 ஏப்​ரலில் பெண் ஒரு​வர் தனது மைத்​துனிக்கு எதி​ராக புகார் அளித்​திருந்​தார். அப்​பு​காரில் அவர், “எனக்​கும் எனது மைத்​துனிக்​கும் ஏற்​பட்ட சண்​டை​யில் அவர் என்னை கடித்​தார். ஆபத்​தான ஆயுதத்​தால் எனக்கு தீங்கு விளை​வித்​தார்” என்று கூறி​யிருந்​தார்.

இதுதொடர்பாக மைத்துனி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் (ஆபத்தான ஆயுதத்தைப்பயன்படுத்தி காயப்படுத்துதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி பெண்ணின் மைத்துனி அவுரங்காபாத் உயர்நீதிமன்றத்தில் மனிதாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் சஞ்சய் தேஷ்முக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு கூறுகையில்,

மும்பை உயர் நீதிமன்றம்
பழனி | பங்குனி உத்திர திருவிழா - திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

” மனித பற்களை ஆபத்தான ஆயுதம் என்று கூற முடியாது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 324- ன் கீழ் மரணம் அல்லது கடுமையான ஆயுதங்களை பயன்படுத்தினால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வழங்கிய மருத்துவ சான்றிதழில் பற்களின் அடையாளங்கள் மட்டுமே உள்ளது என்பதால் இதனை 324 ன் கீழ் கொண்டுவர முடியாது. அப்படி செய்வது சட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவை ஏற்று இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com