திருப்பூர்: ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த அரசுப் பேருந்து? மரத்தில் மோதியதால் 14 பேர் படுகாயம்

தாராபுரம் அருகே அரசு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசு பேருந்து விபத்து
அரசு பேருந்து விபத்துபுதியதலைமுறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை செல்லம்பாளையம் அருகே அரசு பேருந்து ஒன்று கணியூரிலிருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 14-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பேருந்து விபத்து
ஆளவந்தான் ரி ரிலீஸ்.. மதுரை திரையரங்கில் தலையில் சூடம் ஏற்றி கொண்டாடிய ரசிகர்கள்!

சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அவர்களை உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்ட சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதா அல்லது ஓட்டுனரின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்தா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்து விபத்து
எண்ணூர் பகுதியில் 20 ச.கி.மீ அளவில் பரவிய கச்சா எண்ணெய்; கடற்படை ஹெலிகாப்டர் ஆய்வில் வெளிவந்த தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com