தீபாவளி கொண்டாட்டம்: ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஆர்.என்.ரவி

தீபாவளி கொண்டாட்டம்: ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஆர்.என்.ரவி
தீபாவளி கொண்டாட்டம்: ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஆர்.என்.ரவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி இருவரும் நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபஒளி திருநாளாம் தீபாவளி, தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. இவ்விழா அனைவர் வாழ்விலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும், வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com