வேடசந்தூர் திமுக பிரமுகர் வீட்டில் 18 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

திமுக ஒன்றிய செயலாளரும் தொழிலதிபருமான வீரா சாமிநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் 18 மணிநேரம் சோதனையில் ஈடுபட்டனர். வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன்.

இவர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தி வருவதுடன் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். தொழிலதிபரான வீரா சாமிநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு சென்ற 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சாமிநாதனின் வீட்டில் மாலை வரை சோதனை நடத்தினர். பின்னர் தமுத்து பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் 18 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவுற்றது.

வீரா சாமிநாதன்
அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... மீண்டும் பரபரக்கும் கரூர்!

முன்னதாக தோட்டத்து வீட்டு முன்பு 30- க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com