புதுக்கோடை | “நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக..” - திமுக MP M.M.அப்துல்லா செய்த நெகிழ்ச்சி செயல்

பள்ளிக்கட்டடம் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்ற திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, அங்கு நடந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லா
பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லாபுதியதலைமுறை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில், பள்ளிக்கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்.பி, எம்.எம் அப்துல்லா கலந்துகொண்டார். அதே நாளில் பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்ற நிலையில், அதிலும் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லா
பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லாபுதியதலைமுறை

அப்போது, “சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு கல்விதான் சமூக விடுதலையை அளிக்கும். நீங்கள் எல்லாம் படித்து பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 15 மாணவிகளுக்கு உங்கள் கையால் பரிசு வழங்க வேண்டும் என்று எம்.பி அப்துல்லாவிடம் தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அவரும், பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லா
”வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா?” - ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது விசிக!

பரிசுகளை கொடுத்து முடித்த பிறகு மீண்டும் மைக்கை கையில் எடுத்த அவர், “சற்று முன்னர்தான், உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும். அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் என்று பேசினேன். ஆனால், என் கையாலேயே பரிசு பொருட்களாக, சமையல் பொருட்களை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.

அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது. எனவே அந்தப் பரிசுகளைக் கொடுத்து நானும் அவர்களின் தவறுக்கு துணை போனேன். அதற்கு பிராயச்சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்” என்று கூறி பரிசு பெற்ற மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். மேலும், “பரிசை பெற்றுக்கொண்ட அந்தக்குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம் ”என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் அவர்.

பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லா
கிருஷ்ணகிரி: ஒற்றை காட்டுயானை தாக்கி வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com