‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ - பரிந்துரைகளைப் பெறும் பணியில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நேற்று (05/02/2024) முதல் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் பணியை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்ட்விட்டர்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024’ என்று கோரிக்கை மனுக்களை மக்களை நேரில் சந்தித்து பெறும் பணியை தொடங்கியுள்ளது திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு.

'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'
'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'

திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நேற்று காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மஹாலில் மக்களிடம் இருந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களை பெற்றனர்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்

முதல் நாளான நேற்று (05.02.24) திமுகவின் தூத்துக்குடி வடக்கு & தெற்கு, விருதுநகர் வடக்கு & தெற்கு, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் மற்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
“நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டுவோம்” - எம்.பி கனிமொழி பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மஸ்தான், இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com