கருணாநிதி நினைவிடம்: அண்ணா சமாதி அருகே திமுக நிர்வாகிகள் ஆய்வு!

கருணாநிதி நினைவிடம்: அண்ணா சமாதி அருகே திமுக நிர்வாகிகள் ஆய்வு!

கருணாநிதி நினைவிடம்: அண்ணா சமாதி அருகே திமுக நிர்வாகிகள் ஆய்வு!

கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திமுக நிர்வாகிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். 

இதனிடையே கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்ட பம் அருகே 2 ஏக்கம் நிலம் ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து திமுக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பின்னர், மெரி னாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க, இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. 

இதையடுத்து அண்ணா நினைவிடம் அருகே, இடம் தேர்வு செய்ய துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளும் அவர்களுடன் உள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com