கடலூரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன்மீது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. படுகாயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் செம்மங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் இருக்கும் ரயில்வேகேட் மூடப்படாததால் பள்ளிவேன் ரயில்வே ட்ராக்கைக் கடக்க முயற்சித்துள்ளது. அப்போது பள்ளிவேன் மீது ரயில் மோதியதில் கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்தில் தனியார் பள்ளிவேன் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. வேனில் இருந்த குழந்தைகளும் தூக்கிவீசப்பட்டனர்.
விபத்தில் 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநரும்ப டுகாயமடைந்திருக்கிறார். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.