கார் மோதிய விபத்து – 3 பேர் பலி
கார் மோதிய விபத்து – 3 பேர் பலிpt desk

கடலூர் | பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்து – 3 பேர் பலி

மேல் நாரியப்பனூர் அந்தோணியார் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்து. தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
Published on

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணலூர் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சின்னசேலம் அடுத்த மேல் நாரியப்பனூர் அந்தோணியார் திருத்தலத்திற்கு , அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது அவர்கள் மீது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார் மோதி வ5pபத்துக்குள்ளானது.

கார் மோதிய விபத்து – 3 பேர் பலி
சென்னை | விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

இதில், சம்பவ இடத்திலேயே இருதயசாமி (40), அவரது மகள் சகாயமேரி என்ற ஸ்டெபி (18) மற்றும் ஸ்டெல்லா மேரி (35) மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்;ளனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com