அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தொலையில் சென்னையில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. மேலும் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் 11,313 பேர் என்றும் தெரியவந்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் அளவு 55.87 சதவீதமாக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது.