'ஏசி வெண்டிலேட்டர் துளை வழியே..' கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கடையில் இன்று காலை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஏசி வெண்டிலேட்டர் துளை வழியே கடைக்குள் நுழைந்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மாநகர துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஒருவர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்துள்ளது.

நகைக்கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருவர் மட்டுமே கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com