பணிமனை இடிந்து விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

பணிமனை இடிந்து விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

பணிமனை இடிந்து விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாகை அருகே பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டட இடிபாடுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com