வேலூர்: 2 திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல்... ஒருவர் படுகாயம்! வெளியான சிசிடிவி காட்சி

வேலூரில் வட்டி தொடர்பான பிரச்னையில், திமுக கவுன்சிலர்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சக திமுக கவுன்சிலரை தாக்கிய திமுக கவுன்சிலர்
சக திமுக கவுன்சிலரை தாக்கிய திமுக கவுன்சிலர்புதிய தலைமுறை

வேலூர் மாநகராட்சி 24வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர், நேற்றிரவு (28.09.2023) வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஓட்டலில் இருந்துள்ளார். அப்போது 30வது வார்டு திமுக கவுன்சிலர் முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து கவுன்சிலர் சுதாகரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

murugan and stalin
murugan and stalinpt desk

இதில் படுகாயமடைந்த சுதாகர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கவுன்சிலர் சுதாகரின் நண்பர் சரவணன் என்பவர், கவுன்சிலர் முருகனின் நண்பரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

sudhakar
sudhakarpt desk

இதற்கான வட்டித் தொகையை 4 மாதங்களாக சரவணன் செலுத்தாததால் முருகன் தரப்பினர் சரவணன் வீட்டிற்குச் சென்று சத்தம் போட்டுள்ளனர். இது தொடர்பாக கவுன்சிலர் சுதாகர், தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடந்தியுள்ளார்.

சக திமுக கவுன்சிலரை தாக்கிய திமுக கவுன்சிலர்
திமுக பிரமுகரை குறிவைத்து தாக்குதல்: கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

இந்நிலையில், இரண்டு கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் ஓட்டலில் இருந்த கவுன்சிலர் சுதாகரை சக கவுன்சிலர் முருகனின் ஆட்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com