பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிண்னணி பாடகி சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
பின்னணி பாடகி சுசிலா
பின்னணி பாடகி சுசிலாபுதிய தலைமுறை

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ, ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 3,226 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தன் இனிமையான குரலின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவின் சிறந்த - தனித்துவமிக்க பின்னணி பாடகியாக இருப்பவர் தேன் இசை குரலுக்கு சொந்தக்காரரான பாடகி பி.சுசீலா. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். பாடகி பி.சுசீலா தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி பாடகி சுசிலா
மதுரை: ஜோதிடம் பார்ப்பதாக கூறி நூதன திருட்டு - மூன்று பெண்கள் கைது

இந்நிகழ்ச்சியல் பாடகி பி. சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதலமைச்சர், ‘நீ இல்லாத உலகத்திலே’ என்று பி. சுசீலா அவர்கள் பாடிய பாடலை பாடி, அவரை சிறப்பித்து பேசினார்.

இதனை தொடர்ந்து அவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ரூ. 1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இசை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம், நூலகம், கற்றல் மேலாண்மை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்படும்.

பின்னணி பாடகி சுசிலா
ஆளுநர் பதவி இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருப்பதுதான் மரபு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் வளரும்; இதனால்தான் சட்டப்போராட்டம் நடத்துகிறோம். இதில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தால் அனைவருக்கும் கல்வி சாத்தியமாகும்” என்று பேசினார். முதல்வர் பேசியதன் முழு விவரம், இங்கே:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com