ரெட் அலார்ட்
ரெட் அலார்ட்facebook

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ’ரெட் அலார்ட்’ - அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடப்பட்ட ஆரஞ்ச் அலார்ட் ரெட் அலார்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டமாக உருவெடுத்தது.

இந்நிலையில், இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக அதாவது மிக்ஜாம் புயலாக மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமானது முதல் கனமழை வரை மழையின் அளவு பதிவாகி வருகின்றது.

மேலும் புயல் குறித்த தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.எனவே இம்மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும்.” என்று தெரிவித்துள்ளது.

ரெட் அலார்ட்
போட்டு தாக்கப்போகும் மழை.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

முன்னதாக “ சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இம்மாவட்டங்களுக்கான ஆரஞ்ச் அலார்ட் ரெட் அலார்டாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் மிக்ஜாம் புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com