இவற்றை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். அவை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முடிவெடுத்திருப்பதாக தெரிவித்து, அரசாணையை சமர்ப்பிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மூவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.