சென்னை: சாலையில் மலைபோல் குவிந்த குப்பைகள்...!

அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், வீடுகளை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததுடன், குப்பைகளும் குவிந்தன. சைதாப்பேட்டை ஆப்ரஹாம் பிரிட்ஜ் அருகே நெருப்பு மேட்டில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்து சேதமடைந்தன.

Garbage
Garbagept desk

இந்நிலையில் 3 நாட்களுக்கு பின் வெள்ள நீர் வடியத் தொடங்கியது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளுக்குள் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டதால் சாலையில் குப்பைகள் மலைபோல் குவிந்தன. மாநகராட்சி நிர்வாகம் உடனே குப்பைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Garbage
சாலையோர பள்ளத்தில் தேங்கிய நீரில் குப்பைகள் போல மிதக்கும் கார்கள்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com