சாலையோர பள்ளத்தில் தேங்கிய நீரில் குப்பைகள் போல மிதக்கும் கார்கள்...

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பொழிந்த மழையின் பாதிப்பின் கோரக் காட்சிகளின் சாட்சியாக, குப்பைகளைப் போல கார்கள் கிடக்கின்றன.
Cars
Carspt desk
Published on

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இப்போது குப்பை போல தண்ணீரில் மிதக்கின்றன.

flood
floodpt desk

வண்டலூரிலிருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்டச் சாலையை ஒட்டிய பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் கார்கள் மிதக்கின்றன. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்தக் கார்கள், சாலையோர பள்ளத்தை வந்து சேர்ந்துள்ளன.

Cars
மிக்ஜாம் புயல் பாதிப்புகள் - தென் சென்னையில் இந்தளவுக்கு பாதிப்பு ஏன்? ககன்தீப் சிங் பேடி விளக்கம்!

அந்த வழியே செல்வோர், வாகனங்களை நிறுத்தி, தண்ணீரில் கார்கள் மிதப்பதை வேடிக்கை பார்ப்பதோடு, வீடியோவும் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com