child death
child deathpt desk

சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர்..வெளியேவந்து பக்கெட் தண்ணீரில்விழுந்த 11 மாத குழந்தை!

சேலையூரில் நேற்றிரவு வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை, எழுந்து வெளியே வந்து பக்கெட் தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் - உமாதேவி தம்பதியர். இவர்களுக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், நேற்றிரவு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டினுள் தரையில் மூவரும் படுத்து தூங்கியுள்ளனர்.

#BREAKING | 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி
#BREAKING | 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி pt desk

இந்நிலையில், நள்ளிரவில் எழுந்து பார்த்த போது குழந்தை அருகில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

child death
சிவகங்கை: குழந்தை கொன்று புதைத்துவிட்டு நாடாகமாடிய காதல் தம்பதியர்! விசாரணையில் வெளிவந்த உண்மை!

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் புகாரை பெற்று 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com