”சார்பு தன்மையோடு இருப்பதால்தான் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கிறேன்?”- பிரதமரின் விளக்கம் சரியா?

ஊடகங்கள் சார்பு தன்மையோடு இருப்பதால்தான் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுகுறித்து புதிய தலைமுறை நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்...
pm modi
pm modiptweb

பத்திரிகையாளர்: கு.கார்த்திகேயன்

பிரதமர் மோடி சொல்வது உண்மைதான் ஆனால், எந்த சார்பு என்று இவர் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஊடகங்கள் சார்பு நிலையில் இருக்கு. அதனாலதான் நான் சந்திக்கல என்று பிரதமர் மோடி சொல்வது வியப்புதான்.

பத்திரிகையாளர்: பீர் முகமது

பிரதமர் என்பவர் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர். குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமராக ஆக வேண்டும் என்ற கனவோடு ஊடகங்களை சந்தித்த மோடி, இப்போது ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இது சர்வாதிகார தன்மை.

pm modi
சிவகங்கை|"எங்க ஊர்ல எல்லாருமே புட்பால் ப்ளேயர்தான்"- கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் கண்டனுர் கிராமம்!

பத்திரிகையாளர்: பா.கி

பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை ஒரு குறையாக சொன்னால்கூட கடந்த சில மாதங்களில், பல மொழிகளில், பல ஊடகங்களை அவர் சந்தித்து இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பு இல்லாததால் அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் இழப்பு ஒன்றும் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com