RIP Vijayakanth | “இப்படி ஒரு மனிதரை நிச்சயம் இனி காண இயலாது”- பேசமுடியாமல் பேசிய அருண் பாண்டியன்

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு நடிகர் அருண் பாண்டியன் தனது துயரை பதிவு செய்துள்ளார்.
அருண் பாண்டியன்
அருண் பாண்டியன்புதிய தலைமுறை

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு நடிகர் அருண் பாண்டியன் தனது துயரை பதிவு செய்துள்ளார்.

நடிகர் அருண் பாண்டியன்
நடிகர் அருண் பாண்டியன்

நம்மோடு பேசிய அவர், ”விஜயகாந்த்தின் மறைவு செய்தியை கேட்டு 3 மணி நேரத்துக்கு நான் யாரிடத்திலும் எதுவும் பேசவில்லை. எந்த அழைப்பினையும் எடுக்கவில்லை. இப்போதுதான் பேசுகிறேன். அதுவும் எனது மனதில் இருக்கும் பாரத்தினை நிச்சயம் தெரிவித்தே ஆக வேண்டும் என்று பேசுகிறேன்.

அருண் பாண்டியன்
“என்னால நம்பவே முடியல..” - நடிகர் செந்தில் வேதனை

அவரை இழந்தது எனக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே மாபெரும் இழப்பு. இப்படி ஒரு மனிதரை நிச்சயம் நம்மால் இனி காண இயலாது.

வெகு நாட்களாக நான் அவரை சந்திக்கவில்லை. இருப்பினும் நான் அவரை தொடர்ந்து காண்காணித்துதான் வந்தேன். இன்றளவும் எனக்கு தூக்கமே இல்லை. நான் என்னவென்று கூறுவது? திறந்த மனம் படைத்த மனிதர் அவர்” என்று மிகுந்த வேதனையோடு கூறினார். அருண் பாண்டியன், பேச முடியாமல் பேசியது, கேட்போரையும் கலங்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com