காசோலை மோசடி வழக்கு - சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் 

காசோலை மோசடி வழக்கு - சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் 
காசோலை மோசடி வழக்கு - சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் 

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனமும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்கள். 

இதற்காக 7 காசோலைகளையும் கொடுத்திருக்கிறார்கள். பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காசோலையும் திருப்பி வந்த நிலையில் ரேடியன்ஸ் நிறுவனம் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராதிகா மற்றும் சரத்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 6 மாதத்திற்குள் வழக்கை முடுக்க வேண்டும் எனவும் சரத்குமாரும் ராதிகாவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com