தங்க தமிழ்செல்வன், பாண்டிராஜன் இடையே சண்டை ஏற்பட்ட போது.
தங்க தமிழ்செல்வன், பாண்டிராஜன் இடையே சண்டை ஏற்பட்ட போது.எக்ஸ்

”நலம் காக்கும் ஸ்டாலின்” | ’நிகழ்ச்சி பேனரில் படமில்லை’.. திமுக எம்.பி, எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம்!

ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்- ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இருவரும் மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்டனர்.
Published on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கொண்டு கானொளி காட்சி வழியாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் தொடக்க விழா மாவட்டம் தோறும் ஒரு இடத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இருவரும் கலந்து கொண்டனர்.

முகாம் நடைபெறும் இடத்தில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் புரோட்டாகால்-படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.

தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதோடு, தன்னை முட்டாள் என்று திட்டுவதாக கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தங்க தமிழ்செல்வன், பாண்டிராஜன் இடையே சண்டை ஏற்பட்ட போது.
”இது மதிமுக இல்லை; மகன் திமுக” - ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் மல்லை சத்யா!

பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதம் செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து முகாம் மட்டும் நடைபெற்றது.

தங்க தமிழ்செல்வன், பாண்டிராஜன் இடையே சண்டை ஏற்பட்ட போது.
“சாதி சங்கங்கள் இருக்கு, சாதி மேட்ரிமோனியல் இருக்கு.. அப்ப எப்படி சாதி ஒழியும்” - புனிதப் பாண்டியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com