”இது மதிமுக இல்லை; மகன் திமுக” - ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் மல்லை சத்யா!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் என்ற தலைப்பில் நீதி கேட்டு உண்ணா நிலை அறப்போராட்டம் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் சென்னை தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறக்கூடிய இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் விலக்கப்பட்ட மதிமுக பகுதி நிர்வாகிகள், திருவள்ளூர் மாமன்ற உறுப்பினர் சில மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இதில் மதுரை, திருவண்ணாமலை, ராமநாதபுரம ,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வடசென்னை உள்ளிட்ட சில மாவட்டத்தில் இருந்து ஆயிரம் பேர் வரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் தொடங்கும் முன் மதிமுகவின் பொருளாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஈரோடு கணேசமூர்த்தி மற்றும் வைகோ திமுக விலிருந்து வெளியேற்றிய தருணத்தில் உயிர்நீத்த 5 பேருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக மதிமுக பொதுச்செயளாலர் மல்லை சத்தியா செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது,
”தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக இருந்தார் வைகோ... மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி இருக்கிறது மதிமுக. அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் அலட்சியப்படுத்துவதும் அவமானப்படுத்துவதும் அலை கழிப்பதுமாக இருந்த காரணத்தினால் கடந்த ஒன்பதாம் தேதி ’மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்” என்று சொன்ன காரணத்தினால் மக்களிடம் நீதி கேட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளேன்.
மதிமுகவில் நான் இன்றைக்கும் துணை பொதுச்செயலாளராக தான் நீடித்துக் கொண்டிருக்கின்றேன். அவரும் நீக்கவில்லை நானும் விலகவில்லை என்றார்
மதிமுக அலுவலகத்தில் வைகோ முன்னிலையில் நடந்த இணைப்பு குறித்த கேள்விக்கு,
துரை வைகோ கையை கொடுத்ததே ஒரு அநாகரிகமான முறையில் புறங்கையை தான் கொடுத்தார் என்று தெரிவித்த அவர்., கைகளும் இணையவில்லை இதயங்களும் இணையவில்லை என்று தெரிவித்தார். வைகோவின் மனம் கலங்கக்கூடாது என்பதனால் ஒரு பண்பாடு இல்லாத ஒரு நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருந்தது என்றும் தெரிவித்தார்
என் பெயரில் நான் மன்னிப்பு கேட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காலில் விழ கூடாது கட் அவுட் அடிக்கக்கூடாது என துவங்கப்பட்ட இயக்கத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நான் காரணம் அல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அவரது மகன் துரை வைகோவும் தான் காரணம்.
மரண தண்டனை கைதிகளுக்கு கூட கடைசி ஆசை என்பது இருக்கிறது. ஆனால் குறைந்தபட்ச விளக்கம் கூட கேட்காமல் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நிர்வாகிகளை நீக்குகிறார் துரை வைகோ. உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.