மக்களவைத் தேர்தல் 2024: “அடுத்த 7 நாட்கள் 'தாமரை வணக்கம்' என சொல்வோம்” - பரப்புரையில் அண்ணாமலை

“இதுவரை அலைபேசியில் ஹலோ என்று பேசிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலை@annamalai_k

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவையில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்... “எப்படி மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோமோ அதே போல என்னையும் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு மாற்று அரசியல் கோவையிலிருந்து நடக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நாளாக ஏப்ரல் 19 இருக்கும். 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது. அதற்கான பிள்ளையார் சுழி கோவையில் போடப்பட இருக்கிறது. திமுகவினர் இதுவரை சம்பாதித்த மொத்த பணத்தையும், தங்கச் சுரங்கத்தையே இங்கு வந்து கொட்ட போகிறார்கள். ஆனால், மக்கள் நியாயத்தின் பக்கம்தான் நிற்பார்கள். தமிழக மக்களுக்கு லஞ்ச லாவன்யம் இல்லாத மாற்று அரசை பாஜக கொடுக்க போகிறோம்.

அண்ணாமலை
மக்களவை தேர்தல் 2024 | அதிமுக Vs அண்ணாமலை இடையே தொடரும் வார்த்தை யுத்தம்!

70 ஆண்டுகளாக பார்க்கும் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில், குடிநீர் கூட 15 நாட்களுக்கு ஒருமுறை வருவதுடன், சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

இதுவரை அலைபேசியில் ஹலோ என்று பேசிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com