நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு! வெள்ள நிவாரணம் குறித்து ஆலோசனை!

அதிகனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்புபுதிய தலைமுறை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளுக்கு நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிவாரணம் குறித்து அண்ணாமலை பேசியிருக்கிறார்.

 நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உதவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com