மேல்முறையீடு
மேல்முறையீடு முகநூல்

அண்ணா பல்கலைக்கழக வழக்கு|மேல்முறையீடு செய்த தமிழ்நாடு அரசு! காரணம்?

சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது. அதனடிப்படையில் காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மட்டும் ரத்துசெய்ய கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மேல்முறையீடு
அண்ணா பல்கலைக்கழக வழக்கு | "குற்றவாளியை என்னிடம் ஒப்படைத்தால்.." - வீரலட்சுமி ஆவேசம்!

முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு காவல்துறை காரணமில்லை என்றும், மத்திய அரசின் என்.ஐ.சி நிர்வாக குறைபாடே காரணம் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. எனவே, காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மேல்றையீட்டு மனுவில் கோரியுள்ளது. அதேநேரத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com