தமிழ்நாடு
திருத்தணியில் 5 தரைப் பாலங்களை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்
திருத்தணியில் 5 தரைப் பாலங்களை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 1,000 கன அடி நீர், திறந்துவிடப்பட்டுள்ளதால், திருத்தணி பகுதியிலுள்ள 5 தரைப் பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
கொற்றலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் ஆபத்தை உணராமல், தரைப் பாலம் மற்றும் ஆற்றை கடந்து செல்கின்றனர். மேலும் சிலர் தண்ணீரில் நீச்சல் அடித்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: மெள்ள மீளும் தமிழ் சினிமா... ஏமாற்றிய + நம்பிக்கை தந்த சமீபத்திய படங்கள்!

