”குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. படுகொலை; எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? - இபிஎஸ்
திருப்பூரில் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை பராமரிப்பவர் மூர்த்தி. அங்கு மூர்த்தியின் மகன்கள் மூவருக்கும் இடையே நேற்று இரவு கடுமையாக சண்டை ஏற்பட்டநிலையில், இதனை விசாரிக்க வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களை மேட்கோள்காட்டி, பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
அந்தபதிவில், "எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன. காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும்,
காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது? திரு. @mkstalin செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே! ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்-
அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே! மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial" என்று பதிவிட்டுள்ளார்.