Remembering Vijayakanth | “ரொம்ப எளிமையான மனிதர்” - நடிகை ரோகிணி நெகிழ்ச்சி

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மறைவுக்கு நடிகை ரோகிணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவு குறித்து நம்மிடையே பேசிய நடிகை ரோகினி, “ரொம்ப எளிமையான மனிதர். எல்லோருக்கும் ஒரேவிதமான சமமான அளவில் அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர். ரொம்ப இனிமையான மனிதர்.

எல்லோருடனும் இனிமையாகவே பழகுவார். புகழுடைய உச்சத்தில் இருந்தபோதும்கூட, அவ்வளவு சாதாரணமாகவே இருப்பவர். மிகப்பெரிய ஆளுமையாக, நல்ல தலைவராக அவர் உருவெடுப்பார் என்று அவர் நடிகர் சங்கத்துக்காக உழைத்தபோதே எங்களுக்கு தெரிந்திருந்தது” என்று கூறி தன் இரங்கலை தெரிவித்தார்.

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்
🔴LIVE | RIP Vijayakanth | விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com