Death
Deathpt desk

திடீரென வேகத்தை குறைத்த சரக்கு லாரி... அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - இருவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே லாரியின் மீது பின்னால் வந்த கார், தனியார் சொகுசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

செய்தியாளர்: ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் ஓட்டுனர் திடீரென வேகத்தை குறைத்துள்ளார். இந்நிலையில், லாரியின் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியுள்ளது. இதையடுத்து காரின் பின்னால் வந்த சொகுசு பேருந்து காரின் மீது மோதி சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் சாய்ந்தது.

Road accident
Road accidentpt desk

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Death
“வன்மம் கலந்த நோக்கத்தில் சொல்லியிருக்கிறார் ஆளுநர்” - முதலமைச்சர் விமர்சனம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com