தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 7 அடி உயர பிரமாண்ட திருக்குறள் புத்தகம்!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயரத்தில் பிரமாண்டமான திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது.
Mega thirukural book
Mega thirukural bookpt desk

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில், 1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளை விளக்கமாகக் கொண்ட திருக்குறள் புத்தகம் 7 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்ட புத்தகத்தை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த 7 அடி உயர திருக்குறள் புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 133 தலைப்புகளில் 1330 கதைகளை எழுதிய ஆசிரியர்கள், குடும்பத்தினர், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள் திருவள்ளுவர் வேடமணிந்து கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் வேடத்தில் குழந்தைகள்
திருவள்ளுவர் வேடத்தில் குழந்தைகள்இடம் - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

மேலும் திருக்குறள் பாடலுக்கு மாணவிகள் பரத நாட்டியம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Mega thirukural book
வாழ்வியல் கதைகளுடன் திருக்குறள் பேசும் நடிகர் சிவகுமார்! புதியதலைமுறையில் கண்டுகளியுங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com