தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா உறுதி
Published on

தமிழகத்தில் இன்று 639 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது.

3 நாள்களாகத் தமிழகத்தில் 500க்கு குறைவாக கொரோனா பாதிப்பு வந்த நிலையில், இன்று மீண்டும் 600ஐ கடந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4,172 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் 78 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

சென்னையில் மட்டும் இன்று 482 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com