மேலூர்: அரசு மதுபானக் கடை ஊழியரிடம் 5 லட்சம் பணம் வழிப்பறி

மேலூர்: அரசு மதுபானக் கடை ஊழியரிடம் 5 லட்சம் பணம் வழிப்பறி
மேலூர்: அரசு மதுபானக் கடை ஊழியரிடம் 5 லட்சம் பணம் வழிப்பறி

அரசு மதுபானக் கடை ஊழியரிடம் 5 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளராக பாண்டி (43) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு விற்பனை முடிந்து 5 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் தனது சகோதரர் கண்ணன் என்பவருடன் சத்தியபுரம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் பாண்டி மற்றும் கண்ணனை தாக்கி விட்டு பாண்டி வைத்திருந்த 5 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com