மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்த 38 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
வாடிப்பட்டி அருகேயுள்ள சித்தாலங்குடியைச் சேர்ந்த அழகு மணி என்பவரின் ஜல்லிக்கட்டு காளை கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்தது. இதையடுத்து காளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இரைப்பையில் வீக்கம் காணப்பட்டதால் , உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதில் காளையின் வயிற்றில் இருந்த 38 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பேப்பர்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையின் காரணமாக காளையின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுடன் சாலையில் உணவு பொருட்கள் வீசப்படுவதும் , அவற்றை கால்நடைகள் உட்கொள்வதால் கால்நடைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக,சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.