இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்புpt desk

வேலூர்: இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்து - இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ச.குமரவேல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரவீன், வசந்த் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் ரத்தினகிரி பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர்.

சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்

அப்போது கீழ் மின்னல் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், வசந்த், பிரவீன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினகிரி காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
திருச்சி: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 பள்ளி மாணவர்கள் - ஒருவர் சடலமாக மீட்பு; இருவரை தேடும் பணி தீவிரம்

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com