13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை..கருவுற்ற சிறுமி வேதனையில் துடித்ததால் வெளியான அதிர்ச்சி செய்தி!

இரண்டாவது திருமணம் செய்த பெண்ணின் 13 வயது மகளை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பலாத்காரம் செய்த தந்தை
பலாத்காரம் செய்த தந்தைபுதியதலைமுறை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே 27 வயது பெண் ஒருவர், தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ்(33)என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது இரண்டு மகள்கள் மற்றும் கணவருடன் கல்லாத்துப்பட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்தப்பெண் வேலைக்கு சென்றபோது, சுரேஷ்குமார் தனது மனைவியின் 13 வயதான மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

பலாத்காரம் செய்த தந்தை
வெள்ள நீருக்கு இடையே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. ஓடோடி வந்து உதவிய போக்குவரத்துக் காவலர்கள்!

இந்தநிலையில் கடந்த 30ஆம் தேதி அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருந்து கரு கலைந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல அலுவலர் சியாமளா என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சுரேஷ்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டாவது திருமணம் செய்தாலும், தனது மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்காரம் செய்த தந்தை
“கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்” மழையில் நனைந்த புத்தகங்கள்; எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் வேதனைப் பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com