டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்புதிய தலைமுறை

டி20 உலகக்கோப்பை - இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போவது யார் யார்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இறுதி செய்வது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசியுள்ளார்.

இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
‘Low Score-ல கூட 14 எகானமி..’ பாழாய் போகும் 24 கோடி.. கம்பீரை மதிக்காத ஸ்டார்க்! KKR வெற்றி!

சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் பிஷ்னாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என புதிய தலைமுறைக்கு பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ், சஞ்சு சாம்சன், கலீல் அகமத், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று வீரர்கள் பட்டியலில் கில், ரியான் பராக், ஷிவம் துபே ஆகியோரது பெயர்கள் உள்ளதாகதெரிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com