லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாய் வந்த விராட் கோலி.. உற்சாகத்தில் பெங்களூரு அணி!

நடப்பு ஐபிஎல் சீசனில் பங்கேற்பதற்காக, விராட் கோலி இன்று பெங்களூரு அணியின் கூடாரத்தில் இணைந்தார்.
விராட் கோலி
விராட் கோலிட்விட்டர்

இந்த ஆண்டுக்கான (17வது) ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் வழக்கம்போல் 10 அணிகள் களம் காண உள்ளன. இதன் முதல் போட்டியில், சென்னை அணியும் பெங்களூரு அணியும் மல்லுக்கட்ட இருக்கின்றன. இதற்காக வீரர்கள் அவ்வணி கூடாரத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்ச் 22ஆம் தேதி, பெங்களூருவுக்கான முதல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், அவ்வணியில் விராட் கோலி இதுவரை இணையாதது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கிடையே, நாளை (மார்ச் 19) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ’அன்பாக்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, நாளை அந்த அணியோடு இணைவார் என தகவல்கள் உறுதிப்படுத்தின. அந்தத் தகவல்படி, இன்று அந்த அணியோடு விராட் கோலி இணைந்துள்ளார். அவர் இணைந்திருப்பதையும் பெங்களூரு அணி உறுதிப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெண்கள் அணி, இந்த முறை கோப்பையை வென்றுகொடுத்த உற்சாகத்தில் இருக்கும் நிலையில், விராட் கோலியும் அவ்வணியுடன் இணைந்திருப்பது மேலும் அந்த அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவருக்கு இரண்டாவது குழந்தை சமீபத்தில் பிறந்தது. இதன் காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்கூட அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட அவர் இங்கிலாந்தில் குடும்பத்தினருடன் இருந்ததாகவும், அதன்காரணமாகவே அணியில் இணைய தாமதமானதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து கோலி எதுவும் சொல்லவில்லை.

இதையும் படிக்க: ’ரஷ்யாவைத் தாக்கினால்..’ அமெரிக்கா, NATO-க்கு எதிராக களத்தில் குதித்த சீனா.. திடீர் ஆதரவு ஏன்?

விராட் கோலி
அணியோடு இணையாத விராட் கோலி.. வெளியான புது தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com