இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி!

இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி!

இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி!

விஜய் ஹசாரே போட்டியில், குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை ஜார்கண்ட் சுழல் பந்துவீச்சாளர் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டி இப்போது நடந்து வருகிறது. சென்னையில் நேற்று நடந்த போட்டியில். ராஜஸ்தான் அணியும் ஜார்கண்ட் அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 28.3 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில்
ஜார்கண்ட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் 10 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜார்கண்ட் அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஏ வரிசை கிரிக்கெட் போட்டியில் நதீம் முந்தைய சாதனைகளை முறியடித்து உள்ளார். 1997- 98 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் டெல்லி - இமாசலப்பிரதேசத்துக்கு இடையிலான போட்டியில் ராகுல் சங்வி 15 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்கைபற்றியதே சாதனையாக இருந்தது. அதை நதீம் முறியடித்துள்ளார். குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிகவிக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். அதோடு இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதுபற்றி நதீம் கூறும்போது, ’இந்த தினத்தை என்னால் மறக்க முடியாது. ஹாட்ரிக் சாதனை செய்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீழ்த்திய 8 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் கிளீன் போல்டாக்கியது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சக வீரர்கள் சொன்ன பிறகுதான் நான் சாதனை செய்திருப்பதே தெரியும்’ என்றார்.
 
29 வயதாகும் நதீம் 99 முதல் தரப் போட்டிகளில் விளையாடி இதுவரை 375 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ’ஏ’ வரிசை கிரிக்கெட் போட்டியில் 87 ஆட்டங்களில் பங்கேற்று 124 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 109 ஆட்டங்களில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com