Gukesh -praggnanandhaa
Gukesh -praggnanandhaaFB

சின்க்யூஃபீல்ட் கோப்பை செஸ்தொடர்.. முதல் சுற்றிலேயே குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா..

2025 ஆம் ஆண்டு சின்க்ஃபீல்ட் கோப்பையின் தொடக்கச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான டி. குகேஷை-ஐ வீழ்த்தி ஒரு சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பிரஞ்யானந்தா
Published on
Summary

செயிண்ட் லூயிஸில் நடைபெற்றுவரும் சின்க்யூஃபீல்ட் கோப்பை செஸ் தொடரில் முதல் சுற்றில் உலக சாம்பியன் குகேஷை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். கடந்த மூன்று ஆண்டுகளில், குகேஷுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெற்றுள்ள முதல் கிளாசிக்கல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தாவின் நேரடி ரேட்டிங் 2 ஆயிரத்து 784 ஆக உயர்ந்து, அவர் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் நடத்தும் வருடாந்திர செஸ் போட்டியான சின்க்ஃபீல்ட் கோப்பையில் உற்சாகமான தொடக்கத்தை இந்திய நட்சத்திர சதுரங்க வீரரான ஆர். பிரக்ஞானந்தா வெளிப்படுத்தினார். திங்கட்கிழமை முதல் சுற்றுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை வீழ்த்திய அமெரிக்காவின் லெவோன் அரோனியனுடன் பிரக்ஞானந்தா இப்போது முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குகேஷ் - பிரக்ஞானந்தா
குகேஷ் - பிரக்ஞானந்தாweb

350,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இந்தப் போட்டியில் இன்னும் எட்டு சுற்றுகள் மீதமுள்ளது. இதில் பிரக்ஞானந்தா மற்றும் அரோனியனுக்குப் பிறகு ஆறு வீரர்கள் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் குகேஷ் மற்றும் அப்துசத்தோரோவ் அடுத்த சுற்றில் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையில் கடைசி இடத்தில் உள்ளனர்.

சின்க்ஃபீல்ட் கோப்பை 2025ல் முதல் சுற்றில் விளையாடிய பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட பிரக்ஞானந்தா, " சின்க்ஃபீல்ட் கோப்பை 2025 என்ன ஒரு தொடக்கம். 3 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு குகேஷுக்கு எதிராக எனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற முடிந்தது . எப்போதும் கடினமான எதிராளி மற்றும் நான் மிகுந்த மரியாதை கொண்ட ஒரு நபர்," என்றார்.

பிரக்ஞானந்தா ராணியை வைத்து சூழ்ச்சியை எதிர்கொண்டார், அதை குகேஷ் ஏற்றுக்கொண்டு விளையாடினார். அவர் கருப்பு காய்களுடன் விளையாடினார், குகேஷ் வெள்ளை காய்களுடன் விளையாடுவதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு நன்றாக விளையாடியுள்ளார். காரணம் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுவது அவருக்கு ஒரு தனித்துவமான நன்மையைக் கொடுத்துள்ளது. அதனால் பிரக்ஞானந்தாவிடம் 2 பிஷப் அப்படியே இருந்தனர்.

Gukesh -praggnanandhaa
ASIA CUP : ஷ்ரேயாஸ் இடம்பெறாதது முழுக்க முழுக்க அரசியலா..?

நிலைமையை மோசமாக்கும் வகையில், குகேஷ் நேரம் தவறிவிட்டார், மேலும் போட்டியில் நிலைத்திருக்க சில கடினமான நகர்வுகளைக் குகேஷ் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிரக்ஞானந்தா சாதூர்யமாக காய்களை நகர்த்தி, ஒரு சிப்பாயை பலவந்தமாக வென்றதால், மீதமுள்ள அனைத்து நகர்வுகளும் பிரக்ஞானந்தாவுக்கு எளிதாக அமைந்தன. இந்த போட்டியில் வெறும் 36 நகர்வுகள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Gukesh -praggnanandhaa
ஒரு கோல் கூட இல்லை.. 0-6 என படுதோல்வி.. மைதானத்திலேயே கதறி அழுத நெய்மர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com