மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை போட்டிகள்
மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை போட்டிகள்cricinfo

மழை vs இலங்கை | 2 வாஷ் அவுட்.. 2 DLS.. மகளிர் உலகக்கோப்பையில் தொடரும் பரிதாபம்!

நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி ஒரு வெற்றிகூட இல்லாமல் பரிதாபமாக தொடர்ந்துவருகிறது.
Published on
Summary

நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி ஒரு வெற்றிகூட இல்லாமல் பரிதாபமாக தொடர்ந்துவருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரையிறுதிக்கான தகுதியை பொறுத்தவரை, ஒரு அணி மற்ற 7 அணிகளுடன் ஒருமுறை மோதும், இதில் அதிக வெற்றிகள் பெற்று டாப் 4-ல் இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

2025 மகளிர் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா
2025 மகளிர் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியாweb

இந்தசூழலில் 4 போட்டியில் வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், 3வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 4வது இடத்தில் இந்தியாவும் நீடிக்கின்றன.

மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை போட்டிகள்
மகளிர் உலகக்கோப்பை | 3 போட்டிகளே மீதம்.. அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா? வாய்ப்புகள் என்ன?

மழையால் தொடரும் பரிதாபம்..

சொந்த மண்ணில் கொழும்புவில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணிக்கு, 3 முறை மழை வில்லனாக மாறி போட்டியில் குளறுபடியை ஏற்படுத்தியது. இரண்டு போட்டிகள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாதகமான சூழலை மழை ஏற்படுத்தியது.

இலங்கை மகளிர் அணி
இலங்கை மகளிர் அணி

நேற்று கொழும்புவில் நடக்கவிருந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 46/2 நிலையில் இருந்த இலங்கை அணி 20 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 105 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் மாற விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

5 போட்டிகள் முடிவில் 2 புள்ளிகளுடன் கடைசி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இலங்கை அணி. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை போட்டியிலும் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது. சொந்த மணில் தொடர் நடக்கும்போதும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இலங்கை அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை போட்டிகள்
மகளிர் உலகக்கோப்பை | மீண்டும் வில்லனான மழை.. 0 புள்ளிகளுடன் ’இலங்கை’ பரிதாபம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com