சையத் முஷ்டாக் அலி FINAL: மும்பைக்காக மீண்டும் மிரட்டும் ஷர்துல் தாக்கூர்.. ஒரே ஓவரில் 2 விக்கெட்!
2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடைபெற்ற தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை மற்றும் ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் விளையாடிவருகின்றன.
ஒரே ஓவரில் 2 ஓப்பனர்களையும் வெளியேற்றிய ஷர்துல்..
பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். 13 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் மத்திய பிரதேச அணி நல்ல இலக்கை நிர்ணயிக்கும் எண்ணத்தில் களம்கண்டது.
ஆனால் போட்டியின் இரண்டாவது ஓவரை வீசவந்த ஷர்துல் தாக்கூர் மத்திய பிரதேச அணியின் இரண்டு தொடக்க வீரர்களையும் ஒரேஓவரில் வெளியேற்றி அசத்தலான தொடக்கத்தை மும்பைக்கு ஏற்படுத்தி கொடுத்தார்.
2024 ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக முதல் விக்கெட்டை விரைவாகவே எடுத்துவந்த ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டார். அந்தவகையில் சையத் முஷ்டாக் அலி இறுதிப்போட்டியிலும் அசத்தியுள்ளார்.
மும்பை அணிக்கு அழுத்தமான நாக் அவுட் போட்டி என்றாலே சின்ராசை கைல புடிக்க முடியாது என்பது போல தொடர்ந்து அசத்திவருகிறார் ஷர்துல் தாக்கூர்.
போட்டியை பொறுத்தவரையில் மத்திய பிரதேச அணி 9 ஓவர் முடிவில் 54 ரன்கள் எடுத்துள்ளது. ஷர்துல் தாக்கூர் 2 ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.