muralitharan
muralitharanweb

"IPL-லால் கிரிக்கெட் வளர்ச்சியடையாது.." பேசுபொருளான முத்தையா முரளிதரன் பேச்சு!

ஐபிஎல்லால் கிரிக்கெட் வளர்ச்சி அடையாது என சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
Published on
Summary

ஹைதராபாத் அணி பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் ஐபிஎல் வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது எனக் கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பேசும்பொருளாகி வருகிறது.

செய்தியாளர் - விக்னேஷ்

நடப்பு ஐபிஎல் தொடரில் 40 போட்டிகளில் 31 முறை 200+ ரன்கள் வருவதால் இவருடைய விமர்சனம் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

IPL
IPLweb

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சன்ரைசர்ஸ் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி 265 ரன்களை தில்லிக்கு எதிராக 6 பந்துகள் மீதமிருக்க சேஸ் செய்து வரலாறு படைத்தது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் சன்ரைசர்ஸ் அணியின் சுழல்பந்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் ஒரு முக்கியமான விஷயத்தை பேசியுள்ளார்.

muralitharan
20 வயது சிஎஸ்கே வீரர் முதல் அரைசதம்.. +ரன்ரேட் சென்ற சிஎஸ்கே.. மும்பை படுதோல்வி!

முத்தையா முரளிதரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், சூர்யவன்ஷி ஆகாயத்துக்கு அடிக்கிறார். சிறிய ஆடுகளம் பிரச்னை இல்லை; ஆனால், ஆடுகளம் மிகவும் தட்டையாக இருப்பதாலேயே அதிக ரன்கள் குவிக்கிறார்கள். நடுநிலையான ஆடுகளத்தைக் கொடுத்தால் பார்வையாளர்களே சலிப்படைவார்கள்.

டி20 கிரிக்கெட் ரசிகர்கள் என்டர்டெயின்மென்ட்டை விரும்புகிறார்கள். அதனால், அவர்கள் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள். அதனால்தான், இந்தத் தொடரே அப்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்பாக்ட் விதியினால் கூடுதல் பேட்டர்கள் வருகிறார்கள்.

IPL தொடரால் கிரிக்கெட் வளர்ச்சியடையாது. இது ஒரு என்டர்டெயின்மென்ட். தற்போதைக்கு இது மிகப்பெரிய வணிகமாகவே இருக்கிறது. போட்டி சலிப்பாக சென்றால் விளம்பரதாரர்கள், பார்வையாளர்களை இழக்கக் கூடும்.

அதிரடியான ஆட்டத்தை நாங்கள்தான் முதலில் ஆடினோம் கடந்த சீசனில். தற்போது அனைவரும் முயற்சிக்கிறார்கள். சவலான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் தகவமைத்து பந்துவீச வேண்டும். இதற்கு கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்றார். ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் இரண்டிலுமே சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் டாப்3ல் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

muralitharan
மும்பைக்கு எதிராக புதிய வரலாறு படைத்த CSK.. 4 மிரட்டல் சம்பவம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com