'இந்திய அணியில் தமிழர்கள் இல்லாதது வருத்தம்' - உலகக்கோப்பை அணி குறித்து நடராஜன்!

50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
natarajan
natarajanpt web

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அதனை ஒட்டிய விவாதங்களும் வீரர்கள் தேர்வு குறித்த விமர்சனங்களும் கிரிக்கெட் உலகில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க டிக்கெட் விற்பனை தொடர்பான விவாதங்களும், விலை குறித்தான விமர்சனங்களும் செய்யப்படுகின்றன.

Natarajan
NatarajanPT

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும், வீரர்களும் கோப்பை வெல்லும் அணி குறித்தும், தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரோஹித் சர்மாவின் துருப்புச் சீட்டாக குல்தீப் யாதவ் இருப்பார் என்று முகமது கைஃப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அனைத்து அணிகளுமே சவாலானவையாக உள்ளன; நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது, மற்றவர்களை போலவே எனக்கும் வருத்தமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com