திருமணத்திற்காக பறந்த முகேஷ் குமார்.. கடைசி 2 போட்டிகளில் தீபக் சாகருக்கு இடம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாகர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தீபக் சாகர்
தீபக் சாகர்ட்விட்டர்

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி சதத்தால் 222 ரன்கள் குவித்தது. 223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இந்திய அணியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். இதனால் அவருக்குப் பதிலாக சிஎஸ்கே அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தீபக்சாகர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், கடைசி இரண்டு டி20 போட்டிகளில் நிச்சயம் தீபக்சாகர் இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ”அமைதியாக இருப்பதே சிறந்த பதில்” - இணையத்தில் வைரலாகும் பும்ரா பதிவு... இதுதான் காரணமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com