“உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு 3 நாட்களாக தயாரானேன்.. யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை!” - அஸ்வின்

ரோகித் சர்மா ஒரு கேப்டனாக எவ்வளவு குழப்பத்தில் இருந்திருப்பார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது - ரவிச்சந்திரன் அஸ்வின்
அஸ்வின்
அஸ்வின்Twitter

2023 ஒருநாள் உலகக்கோப்பையை எட்டிப்பிடிக்க இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு படி மட்டுமே முன்னேற வேண்டியிருந்தது. ஆனால் எப்போதும் போல ஒரு பலமான இந்திய அணி இருந்தும் கூட அந்த இறுதிப்படியானது வழுக்கும் படியாகவே அமைந்தது. ‘இந்திய மண்ணில் நடந்த ஒரு உலகக்கோப்பையை பலம் வாய்ந்த இந்த இந்திய அணியாலேயே வெல்லமுடியவில்லை என்றால், இனி எப்போது இந்திய அணி கோப்பை வெல்லப்போகிறது’ என்ற ஆதங்கம் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் அதிகமாகவே இருக்கிறது.

அஸ்வின்
தோற்றது நீலம் அணிந்த அணி இல்ல... தவறான கைகளில் சிக்கிய கிரிக்கெட்..!

இதற்கிடையில் இறுதிப்போட்டியில் ஏன் அஸ்வின் இடம்பெறவில்லை? அவர் இடம்பெற்றிருந்தால் டிராவிஸ் ஹெட்டை எளிதாக வெளியேற்றியிருப்பார்? ஏன் ரோகித் சர்மா பொறுப்போடு இறுதிவரை நின்று விளையாடவில்லை? ஏன் ராகுல் அதிரடிக்கு செல்லவில்லை? என்ற பலகேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ashwin
ashwin

இந்த அத்தனை கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில், “கேப்டனாக ரோகித் சர்மாவின் குழப்பத்தை ஒரு சகவீரராக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார்.

இறுதிப்போட்டியில் விளையாட 3 நாட்களாக தயாராகியிருந்தேன்! - ரவிச்சந்திரன் அஸ்வின்

பத்ரிநாத்தின் யு-டியூப் சேனலில் உரையாடியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “இறுதிப்போட்டியில் அதை செய்திருக்கலாம், இதை செய்திருக்கலாம் என எளிதாக கூறிவிட முடியும். பைனல் வரை எல்லாமே இந்திய அணிக்கு சரியாக தான் சென்றுகொண்டிருந்தது. எந்த வீரரையும் நாம் குறை சொல்லிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.

இறுதிப்போட்டி குறித்து பேசுகையில், “இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக நான் 3 நாட்களாக தயாராகிகொண்டிருந்தேன். எவ்வளவு தீவிரமாக தயாராகினேன் என்றால், யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை, ஏன் வாட்ஸப் மெசேஜ்ஜை கூட பார்க்கவில்லை. மொபைல் போனை ஒதுக்கிவைத்துவிட்டு என்னை தயார்படுத்திக்கொண்டிருந்தேன். இறுதிப்போட்டியில் பங்கேற்பது ஒரு பெரிய கனவு. அது எனக்கும் இருந்தது, பைனலில் விளையாட முடியாமல் போனது எனக்கும் வருத்தம்தான். ஆனால் என்னை மீறி என்னுடைய அணிக்கே என்னுடைய முதல் முன்னுரிமை என்று கூறுவேன். ஒன்று நான் பங்கேற்றால் மகிழ்ச்சி, இல்லையேல் அணிக்கு நம் பங்கை முழுமையாக கொடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. மாறாக இறுதிப்போட்டியில் விளையாடாமல் போனதற்கு வருத்தப்பட்டால் 25 வருடங்களாக நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்று பேசியுள்ளார்.

ashwin
ashwin

மேலும் ரோகித் சர்மா குறித்து பேசுகையில், “அதை செய்திருக்கலாம் இதை செய்திருக்கலாம் என இப்போது கூறலாம். ஆனால் ரோகித் சர்மாவிற்கு அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்கள் பற்றியும், அவர்களின் திறமை பற்றியும் நன்றாக தெரியும். ரோகித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் அணியின் கலவை குறித்து 100 முறை யோசித்திருப்பேன். இதுவரை அணியில் எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு 3 ஸ்பின்னர்களோடு நான் ஏன் விளையாட வேண்டும்?. உண்மையில் ரோகித் சர்மாவிற்கு இருந்த குழப்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.

ashwin - rohit
ashwin - rohit

இறுதிப்போட்டிக்கான ஆடுகளம் குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “யாரும் அவரவர்களுக்கான மைதானம் வேண்டும் என்று கேட்டு வாங்குவதில்லை. அது இறுதியில் நிர்வாகம் கொடுப்பது. உண்மையில் மாலை நேரத்தில் களிமண் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தது. அப்போது நமக்கு ஆடுகளம் கடினமாக இருந்தது. ஆனால் விளையாட விளையாட களிமண் ஈரப்பதத்தை எடுத்துவிட்டு, விளையாடுவதற்கு ஏதுவாக மாறியது. டாஸ் வென்றிருந்தால் நம்மால் போட்டியை வென்றிருக்க முடியும். நம் மக்களின் பரந்த மனப்பான்மைக்காக நாம் நிச்சயம் கோப்பை வென்றிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது” என்று பேசியுள்ளார்.

அஸ்வின்
”சஞ்சு சாம்சனுக்கு எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும்'-ரவிச்சந்திரன் அஸ்வின்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com