“உலகின் நம்பர் 1 வீரராக உழைப்பேன்!” முதல்வரை சந்தித்த பின் செஸ் வீரர் குகேஷ் பேட்டி! #Exclusive

"அரசு தொடர்ந்து ஆதரவு அளித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாவார்கள்..." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, புதிய தலைமுறையிடம் செஸ் வீரர் குகேஷ் கூறினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். செஸ் வீரர் குகேஷை பாராட்டி முதலமைச்சர் அவருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார்.

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்த குகேஷ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்தால் இன்னும் பல செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் நமக்கு கிடைப்பார்கள்.

செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 வீரராக முன்னேறுவதற்கு தொடர்ந்து உழைப்பேன்” என்று தெரிவித்தார். அவரின் முழு பேட்டியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com